தமிழகத்தில் முதன்முறையாக பயோ கேஸில் இயங்கும் பேருந்து..!

மிழகத்தில் முதன்முறையாக பயோ கேஸில் இயங்கும் பயணிக்கும் பேருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இயக்கப்பட்டு வருகிறது. கம்ப்ரஸர் நேச்சுரல் கேஸ் எனப்படும் இயற்கை எரிவாயுவை கொண்டு இயக்கப்படும் இந்த தனியார் பேருந்து சோதனை ஓட்டமாக ராசிபுரத்தில் இருந்து சேலத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.

 

பேருந்தில் டீசல் டேங்க் 500 கிலோ கொள்ளளவு கொண்ட சிலிண்டர்கள் ஒரு பக்கத்திற்கு நான்கு வீதம் பொருத்தப்பட்டுள்ளது. 56 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பயோ கேசுக்கு 6 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைப்பதாகவும், சி‌என்‌ஜி கிட்டை பொருத்த சுமார் ஐந்து லட்ச ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.