சீனாவில் 8 மாகாணங்களில் மழை வெள்ள பாதிப்பு- 49 பேர் உயிரிழப்பு, 14 பேர் மாயம்

சீனாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 49 பேர் உயிரிழந்தனர். தெற்கு பகுதியில் உள்ள குவாங்க்ஷி பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. 7 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பான வாழக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் ஏராளமான கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அடித்துச் செல்லபட்டன. மேலும் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 8 மாகாணங்களில் 45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.49 பேர் உயிரிழந்ததாகவும், 14 பேர் மாயமாகியுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.