12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..!

திருச்சியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தோழியின் தாய், தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாநகரை சேர்ந்த சுரேஷ் என்பவர் காண்டக்ட் தொழில் செய்து வருகிறார்.

 

இவரது மகளுடன் பள்ளியில் படிக்கும் மாணவி அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பயன்படுத்தி சுரேஷ் தனது தோழியிடம் தவறாக நடந்துள்ளார். சுரேஷ் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ், அவரது மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.