12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : திருப்பூர் 3ஆவது இடம்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே.8) வெளியானது. இதில், திருப்பூர் மாவட்டம்(97.53%) 3ஆம் இடம் பிடித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 25,597 மாணவர்கள் தேர்வு எழுதியதில் மொத்தம் 24,964 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்..ஒருநாள் முன்கூட்டியே நடக்கும் ஏற்பாடு..!

கோடை விடுமுறை கொண்டாட்டத்தில் இருக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் நிறைவு பெற்றது.

 

இடையில் 2024 மக்களவைத் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். அதன்பிறகு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தயாராக இருக்கின்றன.

 

தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக் கல்வித்துறை கோரிக்கை முன்வைத்துள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி திங்கள் அன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விட்டது. அதற்கேற்ப பணிகளை முடுக்கி விட வேண்டியது மட்டும் தான் பள்ளிக் கல்வித்துறையின் பணி.இந்த சூழலில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அரசு தரப்பில் வெளியிடப்படும் அறிவிப்புகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்க வேண்டும்.

 

இதையொட்டியே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இவரது அனுமதி கிடைத்ததும் மே 6 அன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தமிழகத்தில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 7.5 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

 

12ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவுகளை பொறுத்தவரை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சென்று பார்க்கலாம். மேலும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் செல்போன் எண்ணிற்கும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். உயர்கல்விக்கான அடிப்படையாக 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் விளங்குவதால் மாணவ, மாணவிகள் பெரிதும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி நடைபெறும்..!

10, 11, 12ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பொதுத் தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

 

இதுவரை நடத்தாத பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.