ஐஸ்கிரீம் பிரியர்களே கொஞ்சம் உஷாரா இருங்க. குஜராத்தில் பிரபல நிறுவனத்தின் ஐஸ்கிரீமில் பல்லி வால் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் தனது குழந்தைக்காக வாங்கிய ஐஸ்கிரீமில் பல்லியின் வால் இருந்துள்ளது.
இதனை வீடியோ பதிவு செய்து சோஷியல் மீடியாவில் அவர் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ஆய்வு செய்த அதிகாரிகள், அந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு சீல் வைத்து ₹50,000 அபராதம் விதித்துள்ளனர்.






