முதல்வர் மருந்தகங்கள் முறையாக இயங்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக செயல்பட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
மேலும், விடுமுறை தினங்களில் பணிபுரியும் மருந்தாளுநர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






