பொது இடங்களில் கட்டிடக்கழிவுகளைக் கொட்டினால் ஒரு டன்ணுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூர் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனிடையே சாலைகளில் பொது இடங்களில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பெங்களூரு மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படி கழிவுகளை கொட்டினால் ஒரு டன்னுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.






