ஐஸ்கிரீமில் கிடந்த பல்லி வால்.. ரூ.50,000 அபராதம்

ஸ்கிரீம் பிரியர்களே கொஞ்சம் உஷாரா இருங்க. குஜராத்தில் பிரபல நிறுவனத்தின் ஐஸ்கிரீமில் பல்லி வால் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் தனது குழந்தைக்காக வாங்கிய ஐஸ்கிரீமில் பல்லியின் வால் இருந்துள்ளது.

 

இதனை வீடியோ பதிவு செய்து சோஷியல் மீடியாவில் அவர் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ஆய்வு செய்த அதிகாரிகள், அந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு சீல் வைத்து ₹50,000 அபராதம் விதித்துள்ளனர்.


ஐஸ்கிரீமில் கிடந்த பல்லி.. அதிர்ச்சியான வாடிக்கையாளர்..!

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் பல்லி விழுந்த ஐஸ்கிரீம் சப்ளை செய்ததாக பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ஐஸ்கிரீம் சாப்பிட சென்றவரின் புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 

ஏற்கனவே கடந்த மாதம் செயல்பட்டு வந்து கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.