வீடு தேடி பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் தமிழகத்திலேயே முதன்முறையாக தஞ்சையில் தொடங்கப்பட்டுள்ளது . பிறப்பு இறப்பு சான்றிதழ்களை அவரவர் வீடுகளுக்கு நேரடியாக தபால் மூலம் வழங்கும் திட்டத்தை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் அலைவதை தடுக்கும் பொருட்டு அவரவர் வீடுகளுக்கே தபால் மூலம் சான்றிதழ்கள் அனுப்பப்படும் என்றும் இதனால் மக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என்றும் பொதுமக்களிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்க படாது எனவும் கூறினார்.






