நாக்பூரில் சாலையில் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெட்டூர் பகுதியிலிருந்து சீதா பகுதிக்கு சென்ற பேருந்தில் என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது.
இதையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் வெளியேறிய நிலையில் பேருந்து மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பேருந்தில் பயணித்த 45 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.