கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பள்ளியில் தனியார் பேருந்தின் படிக்கட்டு மற்றும் பின்புற எனில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. ஏறத்தாழ இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மாணவர்கள் தொங்கியபடியே பயணித்ததாக கூறப்படுகிறது.
பேருந்து பற்றாக்குறையால் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மாணவர்கள் ஈடுபட்டார்களா என அதிகாரிகள் விசாரிக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.