இந்தியாவில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேவைப்பட்டால் இரவுநேர பொது முடக்கத்தை அமல்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஓமைக்ரான் தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கொரொனா தொற்று 10 சதவீதத்திற்கும் மேல் இருந்தால் அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மூன்று மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆம்புலன்ஸ் வசதி, மருந்து, ஆக்ஸிஜன் போன்றவற்றின் இருப்பை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும் தேவைப்பட்டால் இரவு நேரத்தை அமல்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.