ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுவன் இருபத்தி ஆறு மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான்.
தண்ணீருக்காகத் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது தவறி விழுந்து சுமார் 50 அடி ஆழத்தில் மண்ணில் சிக்கினான். ராணுவம், காவல்துறையினர் மாவட்ட அதிகாரிகள் உட்பட பலரும் குழந்தையை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.
தொடர்ந்து கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு சிறுவன் சுவாசிப்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலமாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.