கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த பொழுது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த வில்லேஜ் குக்கிங் சேனலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். இந்த சேனலில் முக்கியமானவர் தாத்தா பெரிய தம்பி தான். வயதான காலத்திலும் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு இவர் சமையல் செய்யும் அழகு, அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இருக்கும். இதற்கிடையே இவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து […]
கன்னியாகுமரி மாவட்டம் மலையின் ஒரு பகுதி நேற்று திடீரென வெடித்து சிதறியது. அதிக வெப்பம் காரணமாக மலை வெடித்து சிதறியதாக மக்கள் பேசி கொள்கிறார்கள். இந்த தகவல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள அரசு பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் கண்டெய்னர் லாரியின் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்வதை அந்த வழியாக சென்ற நபர் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 100 விழுக்காடு வாக்கு பதிவை வலியுறுத்தி காவல்துறை சார்பில் ஆயிரம் தாங்கி காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. மூன்று தலைவர்கள் போட்டியிடும் தொகுதி என்பதால் அனைவரும் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக மத்திய தொழில் பாதுகாப்புத்துறையினர், அதிரடிப்படையினர், கலவர தடுப்பு பணியாளர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் முக்கிய வீதிகள் வழியாக அணிவகுப்பை நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குழந்தைகளை விரட்டிய நாயை கொலை செய்த இரு முன்னணியின் நிர்வாகி கைது செய்யப்பட்டார். வடமதுரை பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளராக உள்ளார். பாண்டியம்மாள் என்பவர் வளர்த்திருந்த நாய் ஒன்று ஈஸ்வரனின் குழந்தைகளை கடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த ஈஸ்வரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து நாயின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் […]
மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க முன்பதிவு செய்து சான்றிதழ் தரவேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவின் பொழுது கள்ளழகர் எழுந்தருளும் மண்டப பணிகள் மற்றும் மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டத்தின் பொழுது மாசி வீதியில் தற்காலிக கடைகள் அமைத்து குளிர்பானங்கள், உணவுகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதேபோல் பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்படும், உணவு பாதுகாப்பு துறை பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவை சுத்தமானதாகவும், பாதுகாப்பானதாகவும் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பாஜக தலைமையிலான இந்திய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளிலும் களம் காணுகிறது. குறிப்பாக 24 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. எஞ்சிய 15 தொகுதிகள் பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, […]
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆற்று பாலத்தில் எலக்ட்ரிக் பைக்கில் வந்து கொண்டிருந்த முதியவர் ஒருவர் நிலை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆற்றுக்குள் விழுந்த ஆத்தூரைச் சேர்ந்த இசக்கி பாண்டியன் என்ற முதியவரையும் அவரின் பைக்கையும் சக வாகன ஓட்டிகள் ஆட்டோவில் கயிறு கட்டி மீட்டுள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கடந்த மழை வெள்ளத்தின் பொழுது சேதமடைந்து உயர்மட்ட பாலத்தை விரைவில் சீரமைத்து தரும்படி அந்த பகுதி பொதுமக்கள் […]
சாலை வளைவில் திரும்ப முயன்ற ஜீப்பால் பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர் நிலைத்தடுமாறி விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் வயநாடு கொல்கட்டாவில் நடந்த இந்த விபத்தில் பைக்கில் 17 வயது சிறுவனுடன் வந்து கொண்டிருந்த பூக்குட்டியை சேர்ந்த முகமது ரஃபி என்பவன் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்திற்கு உள்ளானார். இதில் படுகாயம் அடைந்த முகமது ரஃபி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]