ஓய்வு நேரத்தில் மகளுக்காக ஏ.ஆர். ரகுமான் செய்த வேலை..!
ஏ.ஆர்.ரகுமான் தனது இசை மூலம் மக்களை மகிழ்விப்பவர். இந்திய மக்களை தாண்டி இவரது இசை உலகம் எங்கும் ஒலித்துக் கொண்டு தான் உள்ளது. வெளிநாட்டவரும் ஏ.ஆர். ரகுமான் இசைக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.
தமிழக மக்கள் ஏ.ஆர். ரகுமான் இசையில் அடுத்து பொன்னியில் செல்வன் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். படம் இந்த வருட இறுதியில் வெளிவரும் என கூறப்பட்டு வருகிறது.
அண்மையில் ஏ.ஆர். ரகுமானின் மகள் கதீஜாவிற்கு குடும்பத்தினர் மட்டும் சூழ திருமணம் நடந்தது. அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களிவ் அதிகம் பரவி வந்தன.தற்போது ரகுமானின் இரண்டாவது மகள் ரஹீமா தனது அப்பாவுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்து, ஓய்வு நேரத்தில் தனது அப்பா எப்படி போஸ் கொடுக்க வேண்டும் என கற்றுக் கொடுப்பதாக அவர் பதிவு செய்துள்ளார்.





