மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் நடிகர் டி.ராஜேந்தர்..!
டி ராஜேந்தர் மேல்சிகிச்சைக்காக இன்று இரவு அமெரிக்கா செல்ல உள்ளார். இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தர் உடல்நலக்குறைவின் காரணமாக சில தினங்களுக்கு முன்பு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் வயிற்றுப் பகுதியில் சிறிய ரத்தக் கசிவு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக நடிகர் சிலம்பரசன் கூறியிருந்தார். அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
விசா கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டு நிலையில் கடந்த வாரம் அமெரிக்கா செல்ல விசா கிடைத்து. இன்று இரவு 9.30 மணிக்கு தனது குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல டி.ராஜேந்தர் திட்டமிட்டுள்ளார்.





