கட்டுமான பணியின் போது ஏற்பட்ட மின் விபத்தில் ஒருவர் பலி..!
சென்னை கோயம்பேட்டில் கடந்த 25ஆம் தேதி வீடு கட்டுமான பணியின் போது தொழிலாளி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.அப்பொழுது மின்சார வொயரில் இரும்பு கம்பி பட்டு கோவிந்தராஜ், வினோத், ஏழுமலை ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏழுமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது சம்பந்தமாக வீட்டின் உரிமையாளர் ஒப்பந்ததாரர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





