--- --:--:-- --

கரூரில் முதல்வர் விஜய் வருகை – நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ஆனந்த்

9

ரூர் மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள அரசு விழா மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்க உள்ள நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார்.

 

இந்த ஆய்வின்போது மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து மேடை அமைப்பு, பொதுமக்கள் அமரும் வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

 

 

மேலும், நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் முழுமையாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கரூரில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Right Menu Icon