காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை எஸ்.சி/எஸ்.டி. வழக்கில் கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டி.எஸ்.பி. சங்கர் கணேஷின் கைதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிபதி செம்மல் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.
நீதிபதி செம்மல் தற்போது அரியலூர் மாவட்டத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தலைமைப் பதிவாளர் அல்லி இன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா?
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!
தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!
மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்..!
தமிழ்நாட்டிற்கு வரும் மோடி இட்லி, தோசைதான் பிடிக்கும் என்பார் - கார்த்தி சிதம்பரம்






