தன் துணை குறித்து ஓப்பனாக பேசிய ராஷ்மிகா மந்தனா..!
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான். இவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
ராஷ்மிகா தற்போது ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் உங்கள் துணை எப்படிப்பட்டவர் என்று தொகுப்பாளர் ராஷ்மிகாவிடம் கேட்டபோது, அவர் சிரித்துக் கொண்டே, “உங்கள் எல்லோருக்கும் பதில் தெரியும்” என்று கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




