வாகன பதிவு சான்றிதழ் வழங்க தாமதம்..ரூ.10,000 அபராதம்..!

வாகன பதிவு சான்று அளித்து தாமதித்த விற்பனை நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

 

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன், அவிநாசி சாலையில் உள்ள வாகன விற்பனை நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். அவருக்கு வாகன பதிவு சான்றிதழ் 17 மாதங்கள் வரை வழங்காமல் இருந்துள்ளது.

 

வழக்கறிஞர் மூலம் சட்ட முறையாக அணுகிய போது இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் குறைத்தீர் நீதிமன்றத்தை பார்த்திபன் நாடினார்.

 

விசாரணையின் முடிவில் நிறுவனத்தின் சேவை குறைபாட்டால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக பத்தாயிரம் ரூபாயும், வழக்குச் செலவாக 3 ஆயிரம் ரூபாயும் வாகன விற்பனை நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.