திமுக புறவாசல் வழியாக வெற்றி பெற்றுள்ளது : இ‌பி‌எஸ், ஓ‌பி‌எஸ்..!

ரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி புறவாசல் வழியாக பெற்ற வெற்றியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

 

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற போதிலும் தோல்வியுற்றவர்கள் ஆகவே அறிவிக்கப்பட்டுவிட்டதாக குற்றம்சாட்டினார்.

 

அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை அறிவிக்க தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டவில்லை என்றும் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கையை உள்நோக்கத்துடன் தாமதப்படுத்தபட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

மேலும் அதிமுக முகவர்கள் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையதிற்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையத்தின் திமுக தனது கைப்பாவையாக மாற்றி இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

திமுக பெற்ற வெற்றி புறவாசல் வழியாக பெற்ற வெற்றி என்பதை கண்டிப்பாக சட்டத்தின் முன்பு வெளிப்படுத்துவோம் என்றும் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்கள் கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.