உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிகிச்சைக்கு அழைத்து செல்ல மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்டதால் 6 வயது சிறுவன் தனது தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. டியோரிய மாவட்ட மருத்துவமனையில் முதியவர் ஒருவர் காயத்திற்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார் .
இந்நிலையில் அங்கு உதவியாளராக இருந்த ஊழியர் முதியவரை ஒவ்வொரு முறையும் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல 30 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் முதியவரின் மகள் அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து இழுத்து செல்ல பேரன் பின்னால் தள்ளி சென்றான்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் பணம் கேட்ட வார்டு உதவியாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள் :
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைந்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி..!
காலாவதியான குழந்தைகள் தின்பண்டங்கள் பறிமுதல்..!
பி.எம்.ஸ்ரீ' திட்டத்தில் இணைந்த கேரளா மத்திய அரசுடன் ஒப்பந்தம்..!
திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த கொடூரம்..!
ஆந்திராவில் தீக்கிரையான ஆம்னி பேருந்து.. 40 பேரில் 25 பேர் பலியான சோகம்..!






