நாளை அனைத்துப் பள்ளிகளும் இயங்குமா..?

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 22ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

 

வாக்கு மையங்கள் பெரும்பாலும் கல்லூரிகளிலேயே அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில இடங்களில் பள்ளிகளில் அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது. 22ம் தேதி பள்ளிகள் முழுமையான அளவில் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் 99 விழுக்காடு வாக்கு எண்ணிக்கை மையங்கள் கல்லூரிகளில் அமைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பள்ளிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.