நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பிப்ரவரி 17 மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது..!

கர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் 17 ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவு பெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

 

இந்நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஏனைய பிரசாரங்கள் அனைத்தும் வரும் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் முடிவுக்கு வரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

தேர்தல் பிரச்சார முடிவுக்கு வந்த பின்னர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிலும் வாக்காளர்களாக அரசியல் அல்லது அரசியல் கட்சிகள் தலைவர்கள் வெளியேற வேண்டும் என்றும் அவ்வாறு வெளியேறாத அவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

 

மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி வாக்குச் சாவடியை தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.