செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு படித்து வரும் சஞ்சய், பதினோராம் வகுப்பு படித்து வரும் மற்றொரு சஞ்சய் ஆகிய இருவரும் நேற்று மாலை வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த பெற்றோர் சக மாணவர்களிடம் விசாரித்துள்ளனர்.
இருவரும் ஆற்றில் குளிக்க சென்றதாக அவர்கள் கூறியதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது ஆற்றங்கரையில் மாணவர்களின் ஆடைகள் இருந்துள்ளன. இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடி அவரது உடலை மீட்டனர்.