மருத்துவமனை செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தை..!

சிவகங்கையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. திருப்பத்தூரை சேர்ந்த ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

 

ஆனால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.