செத்து கரையொதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள்..!

யிரக்கணக்கான மீன்கள் சிலி நாட்டில் இறந்து கரை வந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சிலியில் உள்ள ஆற்றின் கரையில் ஆயிரக்கணக்கான இறந்த மத்திகள் இருந்தன.

 

அங்கு எடுக்கப்பட்ட மாதிரிகள் இயற்கையான நிகழ்வின் படைப்பு என்பதை காட்டியுள்ளது. அறிக்கைகளின் படி சுமார் 3,000 டன் மீன்கள் கடலில் இருந்து ஆறுகளுக்கு இடம் பெயர்ந்தன. இதனால் நீர் அளவில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது.

 

இதனால் தான் மீன்கள் இறந்துள்ளன என தகவல் வந்துள்ளது. ஆனால் இயற்கையாக ஆயிரக்கணக்கான மீன்கள் எப்படி சாகும் இதற்கு பின்னணியில் வேறு ஏதேனும் உள்ளதா என பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது.