உடல்நலக்குறைவால் காலமான கணவருக்கு சிலை வைத்து காதலர் தினத்தில் மனைவி திறந்து வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது. பிரதான சாலை மத்திய சட்டக் கல்லூரி அருகே உள்ள அன்னை இந்திரா நகர் 3வது குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கோமதி சசிகுமார்.
கடந்த 2009ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் கணவன் மீது அதிக பாசம் கொண்ட மனைவி கோமதி அவரது வீட்டு வளாகத்தில் ஒரு மணிமண்டபம் உருவாக்கி சசிகுமாரின் உருவம் பொறித்த மார்பளவு சிலையை திறந்து வைத்துள்ளார்.
கணவரின் சிலையை காதலர் தினமான 14ஆம் தேதி ஊர்மக்கள் முன்பு திறந்து வைத்து வழிபட்டு வருகிறார். கணவருக்கு சிலை வைத்து மனைவி கடவுளாக வழிபடுவது அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






