கடலூர் அருகே உள்ள பேரூராட்சியில் நடந்த வாக்குப்பதிவின் போது கணவரை இழந்து உடல் வீட்டில் இருக்கும் நிலையிலும் மனைவி ஒருவர் வந்து வாக்களித்தார். கடலூர் மாவட்டம் புவனகிரியில் பேரூராட்சி நான்காவது வார்டில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இந்நிலையில் புவனகிரி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் திடீரென உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார். கணவன் இறந்தும் அவரது மனைவி வனிதா வாக்களித்தார். வனிதாவின் இத்தகைய செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில் கணவரின் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.






