சொத்துக்காக தாயை வெடிகுண்டு வைத்து கொலை செய்த மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தம்மாள்.
இவருக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் தன்னை கற்பனை காதல் இளைய மகன் செல்வகுமார் தவிர மற்ற மகன்கள் மற்றும் மகள்களுக்கு முத்தம்மாள் சொத்துக்களை எழுதி வைத்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் தாயை வெடிகுண்டு வைத்து படுகொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் செல்வகுமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.






