ஆஸ்திரேலியாவில் கடலில் நீந்தி கொண்டிருந்த நபரை பெரிய சுறா மீன் கடித்து விழுங்கிய அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடலில் நீச்சல் அடித்துக்கொண்டிருந்த நபரை நெருங்கிய 13 அடி சுறா அவரை திடீரென தாக்கியது.
இதனால் பதற்றமடைந்த நபர் சுறாவிடம் இருந்து தப்பிக்க முயன்ற பொழுது அவரை கடித்து விழுங்கியது. இந்த காட்சியைக் கண்டவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். மீனவர்கள் மற்றும் மக்கள் என ஏராளமானோர் இருந்தும் சுறா தாக்குதலிலிருந்து அந்த நபரை காப்பாற்ற முடியாதது துரதிர்ஷ்டவசமானது என காணொளியை பார்த்த பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.






