நடிகர் ரஜினியின் சிலையை களிமண்ணில் வடிவமைத்த ரசிகர்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே களிமண்ணால் தனது சிலையை வடிவமைத்த இளைஞருக்கு நடிகர் ரஜினி ஆடியோ மெசேஜ் அனுப்பி பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

ரஜினியின் தீவிர ரசிகரான 21 வயது இளைஞர் ரஞ்சித் ரஜினியின் விதவிதமான உருவங்களை களிமண்ணால் செய்வதை வழக்கமாகக் கொண்டவர். சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் செய்த ரஜினி சிலையுடன் சென்னை சென்ற ரஞ்சித் ரஜினியை நேரில் சந்தித்து சிலையை அவரிடம் கொடுத்திருக்கிறார்.

 

இந்த நிலையில் ரஜினியின் மார்பளவு சிலையை வடித்த ரஞ்சித் அதனை சமூகவலைதளத்தில் பதிவேற்றி உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ள நிலையில் அதனை பார்த்த நடிகர் ரஜினி ரஞ்சித்தை பாராட்டியுள்ளார்.