ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் மாயமாகி உள்ளனர். தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஜங்ஷன் கடலோரப் பகுதிகளில் புயல் காற்று வீசி வருவதால் எதிரொலியாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. சில இடங்களில் 4.6 அடி உயரம்வரை வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். வாகன போக்குவரத்தும் வெகுவாக பாதிப்படைந்துள்ளது.
மீட்பு படையினர் குவிக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நீரில் மூழ்கிய பெண்ணின் சடலத்தை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.






