சிறுவர் பூங்காவில் நுழைந்த கட்டு விரியன் பாம்பு..!

ர்மபுரி ஆட்சியர் அலுவலகம் சிறுவர் பூங்காவில் இருந்து திடீரென வெளிவந்த கட்டு விரியன் பாம்பை கண்டு அங்கிருந்த பெண்கள் அலறி அடித்து ஓடினர்.

 

கொரொனா காரணமாக புதர் மண்டிக்கிடந்த பூங்கா தற்பொழுது ஆட்சியர் உத்தரவின் பேரில் தூய்மை படுத்தப்பட்டு வருகிறது. இன்று காலை தூய்மைப் பணியாளர்கள் மண்டிக்கிடந்த புதர்களை அகற்றிய போது உள்ளிருந்து கட்டுவிரியன் பாம்பு ஒன்று வெளியே வந்ததை கண்டு அங்கிருந்த பெண்கள் அலறி அடித்து ஓடினர்.

 

தீயணைப்பு துறையினர் கட்டு விரியன் பாம்பை லாவகமாக பிடித்து காட்டிற்கு கொண்டு சென்றனர்.