முதல்வராக நான் அனுபவித்த வேதனையை ஸ்டாலின் இப்போது அனுபவிக்கிறார்..!

முதலமைச்சராக நான் அனுபவித்த வேதனைகள் இப்பொழுது ஸ்டாலினுக்கு ஆரம்பித்து இருக்கிறது என புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில் பேசியவர் ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களை பயன்படுத்தி மாநில முதல்வர்களுக்கு பாஜக தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது எனவும் கடந்த ஐந்து ஆண்டுகால முதலமைச்சர் என்ற முறையில் நான் அனுபவித்த வேதனைகள் இப்பொழுது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்திருக்கிறது என கூறினார்.

 

புதுச்சேரியில் நரேந்திர மோடி அரசு இந்தியைத் திணிப்பதாகவும், ரங்கசாமி தலைமையிலான அரசு வேடிக்கை பார்ப்பதாக கூறி அவர் கூட்டணியில் இருப்பதற்காக தலையாட்டி பொம்மை போல் ரங்கசாமி செயல்பட்டு வருகிறார் என குற்றம் சாட்டினர்.