மேற்கு வங்காள ஆளுநருடன் சவுரவ் கங்குலி நடத்திய சந்திப்பு..!

ந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி, மேற்கு வங்காள ஆளுநர் ஜகதீப் தங்கரியை சந்தித்து பேசியுள்ளார். ஒரு மணி நேரத்திற்கு மேல் சந்திப்பு நீடித்த நிலையில் இது மரியாதை நிமித்தமானது என்றும் இதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

 

இந்தியாவின் பழமையான கிரிக்கெட் மைதானமான ஈடன் கார்டனுக்கு வருமாறு கங்குலி தன்னை அழைத்ததாகவும் அதைத்தான் ஏற்றுக்கொண்டதாகவும் ஆளுநர் ஜகதீப் தன்கர் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். முன்னதாக அரசியலில் குதிக்க உள்ளதாகவும் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

 

மேற்குவங்காளத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கங்குலியை பாஜக முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.