5 வார்டுகளில் இன்று மறுவாக்குப்பதிவு..!

கர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஐந்து வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னை, மதுரை, அரியலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 5 ஆண்டுகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

5 வார்டுகளில் இன்று மறு வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதுரை திருமங்கலம் நகராட்சி 15வது வார்டில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 17-ஆவது வார்டு மற்றும் திருவண்ணாமலை நகராட்சியில் 25வது வார்டு வாக்குச்சாவடி 57M, 57w, வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.