பஞ்சாப் நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்தார்..!

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட பஞ்சாப் நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்தார். ஹரியானா மாநிலம் சோனிபட் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பஞ்சாப் நடிகர் தீர்த்து உயிரிழந்தார்.

 

குண்டலிமனுஷர் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் மீது தீப் சித்து கார் மோதியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

 

விபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று டெல்லியில் பேரணி நடைபெற்றது.

 

அப்போது சில இடங்களில் வன்முறை வெடித்தது. செங்கோட்டையை பலர் முற்றுகையிட்ட நிலையில் அங்கு சீக்கிய மத கொடியும் ஏற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் விவசாயிகளை தூண்டிவிட்டதாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

 

இந்நிலையில் அவர் விபத்தில் உயிரிழந்தது பல கேள்விகளை கிளப்பியுள்ளது.