அரியலூரில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்த ஜெயராமன் மாணவிகளிடம் பாலியல் தொடர்பான வார்த்தைகளை பேசுவது, மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயராமனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






