கொரோனா பரிசோதனையை 60 ஆயிரமாக குறைக்க திட்டம்..!

மிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சுமார் 60,000 ஆக குறைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கொரொனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருக்கும் பொழுது தினசரி ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தமிழகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.

 

தற்பொழுது தொற்று குறைந்து வருவதால் பரிசோதனையும் குறைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே கொரொனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேவையற்ற பரிசோதனைகளை தவிர்க்க வேண்டும் எனவும் சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் அறிகுறி உள்ளோருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.60 வயதுக்கு மேற்பட்டோருக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.