திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலை வழியாக சென்ற அரசு பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 47 பயணிகளுடன் நெல்லையில் இருந்து கோயம்பத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்தின் முன் சக்கரம் சாலையில் கழன்று ஓடியது.
ஓட்டுநர் கனகராஜ் உடனடியாக கண்டுபிடித்து பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்திலிருந்து இறங்கிய பயணிகள் மற்ற அரசு பேருந்து மூலம் கோயம்புத்தூர் சென்றனர். நடுவழியில் நின்ற பேருந்து கிரேன் மூலம் அகற்றப்பட்டது.






