பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் மகன் திடீர் கைது..!

காரில் வைத்து மதுபானங்களை கடத்தியதாக பாகிஸ்தான் பிரதமரின் வளர்ப்பு மகனை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவி வகித்து வருகிறார்.

 

பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணியாக பிரதமர் இம்ரான்கானின் மனைவி புஷ்ரா பீவி உள்ளார். தற்போது இம்ரான்கான் ரஷ்ய அதிபரை சந்திக்க சென்ற நிலையில் இம்ரான்கான் மகன் மூஸா கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அவருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இம்ரான்கானை திருமணம் செய்துகொள்வதற்கு முன்னதாக தனது முன்னாள் கணவருடன் இணைந்து மூஸாவை பெற்றெடுத்தார்.

 

கைது செய்யப்பட்ட அதே நாளில் விடுதலை செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு அதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.