தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. தொற்று பரவல் குறைந்த நிலையில் தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
கொரொனா தொற்று குறைந்துவரும் நிலையில் தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி நர்சரி மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. பொருட்காட்சிகள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள், வணிக வளாகங்கள் உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவை 100 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது. மேலும் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 200 பேரும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.






