கர்நாடகாவில் பள்ளியில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை அம்மாநில உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதுதொடர்பாக வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடுக்க எந்த சட்டமும் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் மாணவிகள் சீருடை அணிய மறுக்கவும் இல்லை எனவும் சீருடை மேலே ஹிஜாப் அணியவும், சீருடை நிறத்திலேயே ஹிஜாப் அணிய அனுமதி வழங்க வேண்டும் என கோரப்பட்டது.
ஏற்கனவே திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்தும் அடிப்படை கடமைகளா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஹிஜாப் அணிவது அடிப்படை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.







