விபத்தில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை..!

கோவையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ஷியாம் பிரசாத் என்பவருக்கும் சுவாதி என்பவருக்கும் நேற்று முன்தினம் காலை திருமணம் நடைபெற்றது.

 

இந்த நிலையில் இன்று காலை பிரசாத், மனைவி அவரது பெற்றோர் ஆகிய 4 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

 

இந்த இடிபாடுகளில் நான்கு பேரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களின் உதவியுடன் 4 பேரை மீட்டனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே புது மாப்பிள்ளை உயிரிழந்தார்.