டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் ஓடிஆர் உடன் ஆதாரை இணைப்பதற்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓடிஆர் எனப்படும் ஒருமுறை நிரந்தரப் பதிவு கணக்குடன் ஆதார் எண் இணைக்க தேர்வர்கள் மீண்டும் நினைக்கத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வரும் மார்ச் 23ம் தேதியுடன் முடிவடைவதால் அந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.






