திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி எதிராக முழக்கம்

திருப்பூர் அவிநாசி சாலை காந்திநகர் சிக்னல் அருகே, “அம்மா ஆட்சி வேண்டும், கழகம் ஒன்றிணைய வேண்டும்” என வலியுறுத்தி, “அதிமுக உண்மை தொண்டர்கள்” என 11 குறிப்பிடப்பட்ட பதாகைகள் ஏந்தி 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எடப்பாடி பழனிசாமி வரும் வழியில் நிகழ்ந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக பிளவுகள் நீங்கி, கழகம் ஒன்றுபட வேண்டும் என முழக்கம்மிட்டனர்.

நேபாள் வன்முறை: இந்திய பெண் உள்பட 51 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் Gen Z போராட்ட குழுவின் வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு இந்திய பெண்மணி, 3 போலீசாரும் அடக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

அதேபோல், Gen Z போராட்ட குழுவிற்கும், ராணுவத்திற்கும் இடையேயான 2-வது கட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் இடைக்கால அரசை அமைப்பது, நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.