லாலு பிரசாத்திற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

மாட்டு தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத்துக்கு ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பீகார் மாநில முன்னாள் முதல் அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ஏற்கனவே 4 வழக்குகள் லாலு பிரசாத் மீது தொடரப்பட்ட நிலையில் அதில் 4 வழக்குகளிலும் ஜாமீன் பெற்றிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

பிஹாரில் கருவூலத்திலிருந்து 950 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக மாட்டுத் தீவன வழக்கில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.