பலூன்கள் மூலம் தங்களை சீனா உளவு பார்ப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள விமானப்படை தளங்கள் அணு ஆயுதத்தளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலூன் பறந்துள்ளது.
வானிலை தடை செய்யப்பட்ட பகுதிகளில் பலூன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது உளவு பணிக்காக செலுத்தப்பட்ட பலூன் என கூறும் அமெரிக்கா ராணுவம் முதலில் பலூனை சுட்டுத் தள்ள முடிவு செய்யப்பட்டதாகவும் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் அந்த முடிவை கைவிட்டதாகவும் கூறியுள்ளது.
இரண்டு நாட்களாக அமெரிக்க வான் பரப்பில் பறந்து வரும் இந்த பலூன் தடை செய்யப்பட்ட பகுதிகளை நோக்கி செல்வதாகவும் நிச்சயம் இது சீனாவில் உணவு பலூனாக இருக்கும் எனவும் அமெரிக்கா அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அமெரிக்க அதிபர் பைடனுடன் ராணுவ தலைமை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினார்.